டெல்லி : நாடு முழுவதும் முக்கிய தனியார் மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசியின் விலை 6 மடங்கு உயர்த்தப்பட்டு இருப்பது பொதுமக்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது. உலகின் ஏராளமான நாடுகள் தங்கள் நாட்டு மக்களுக்கு இலவசமாக தடுப்பூசியை வழங்கி வருகின்றன. சில நாடுகளில் மட்டும் தடுப்பூசிகள் விலைக்கு மட்டுமே கிடைத்துள்ளன. அந்த நாடுகளின் பட்டியலில் இடம்பெற்றுள்ள இந்தியா உலகிலேயே அதிக விலைக்கு தடுப்பூசி கிடைக்கும் நாடு என்ற பெயரை பெற்றுள்ளது. பூனேவில் சீரம் நிறுவனத்தால் உற்பத்தி செய்யப்பட்டு வரும் கோவிஷீல்டு தடுப்பூசி தற்போது தனியார் மருத்துவமனைகளில் 700 ரூபாயில் இருந்து 900 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.