சென்னை முழு ஊரடங்கு எதிரொலி!: சொந்த ஊர் செல்ல சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பசி, பட்டினியுடன் காத்திருக்கும் புலம்பெயர் தொழிலாளர்கள்..!! May 10, 2021 சென்ட்ரல் ரயில் நிலையம் சென்னை: தமிழ்நாட்டில் இன்று முதல் 15 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் சொந்த ஊர்களுக்கு செல்வதற்காக சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட புலம்பெயர் தொழிலாளர்கள் காத்துக்கிடக்கின்றனர். பீகார், ஜார்கண்ட், மத்தியப்பிரதேசம், உத்திரபிரதேசம், சத்தீஸ்கர், ஒடிசா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த பல லட்சம் புலம்பெயர் தொழிலாளர்கள் தமிழ்நாட்டில் வேலை செய்து வருகின்றார்கள். இன்று முதல் அமலாகியுள்ள முழு ஊரடங்கால் புலம்பெயர் தொழிலாளர்கள் வேலை இல்லாமல் கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனர். சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் தங்கி வேலை செய்யும் வடமாநிலத்தவர்கள், ரயில்களில் செல்ல ரயில் நிலையத்தில் குவிந்துள்ளனர். ரயில்களில் தற்போது முன்பதிவு இல்லாத பெட்டிகள் இல்லை என்பதால் இவர்கள் அனைவரும் முன்பதிவு செய்து தங்கள் ரயில்களுக்காக ரயில் நிலையத்திலேயே காத்துக் கொண்டுள்ளனர். தமிழ்நாட்டில் ஏற்கனவே இரவு நேர முழு ஊரடங்கு, வார இறுதி நாட்களில் ஊரடங்கு என பிறப்பிக்கப்பட்ட நிலையில், தற்போது தொடர்ந்து 15 நாட்களுக்கு முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பசியால் வாடி வரும் தங்களுக்கு உணவு தரவேண்டும் என்றும் விரைந்து சொந்த ஊர் செல்ல உதவ வேண்டும் என்றும் புலம்பெயர் தொழிலாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிண்டி கத்திப்பாரா சந்திப்பில் விமான பாதைக்கு பாதிப்பு இன்றி 2ம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள்: ஆணையம் அனுமதி
கொலை செய்வதாக அடிக்கடி மிரட்டியதால் மது வாங்கி கொடுத்து ரவுடி படுகொலை: நண்பர்கள் பரபரப்பு வாக்குமூலம்
தேர்தல் நிதியை சுருட்டியதாக உள்கட்சி மோதல் அதிமுக நிர்வாகியின் மகனுக்கு சரமாரி உருட்டுக்கட்டை அடி: வட்ட செயலாளர் கைது
சென்னை மாநகரில் சட்டவிரோதமாக வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க 3 மாதங்களில் கொள்கை முடிவு: ஐகோர்ட்டில் தமிழக அரசு தகவல்
கிளாம்பாக்கம்- செஞ்சிக்கு சென்றபோது கூடுதல் கட்டணம் வசூலித்த பஸ் கண்டக்டர் சஸ்பெண்ட்: பொது மேலாளர் உத்தரவு
சென்னையில் சட்டம் ஒழுங்கு பிரச்னையின்றி அமைதியான முறையில் தேர்தல் ஓட்டு இயந்திரங்கள் வைத்துள்ள 3 இடங்களில் கட்டுப்பாட்டு அறையுடன் 4 அடுக்கு பாதுகாப்பு: போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் தகவல்
ஆர்.கே.நகர் தொகுதியில் ஒரு சில இடங்களில் ஓட்டு இயந்திரம் பழுது காரணமாக வாக்குப்பதிவு 1 மணிநேரம் தாமதம்: எம்பி, எம்எல்ஏக்கள் வரிசையில் நின்று வாக்களித்தனர்
இந்தியாவின் தலை எழுத்தை மாற்ற இந்தியா கூட்டணியை வெற்றி பெற செய்வீர்: மத்திய சென்னை திமுக வேட்பாளர் தயாநிதி மாறன் பேச்சு
நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு சென்னையில் இருந்து இன்று 2,970 சிறப்பு பேருந்து இயக்கம்: போக்குவரத்து துறை தகவல்
தென்சென்னை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த போது வீடு இல்லாதவர்களுக்கு வீடு வழங்க நடவடிக்கை எடுத்தேன்: அதிமுக வேட்பாளர் ஜெயவர்தன் பரப்புரை