சென்னை: சென்னையில் அத்தியாவசிய, அவசர பணிகளுக்காக 200 மாநகர பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முழு ஊரடங்கு அமலில் உள்ளதால் இன்று முதல் முக்கிய வழித்தடங்களில் 200 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. பேருந்துகளில் பயணிப்போர் நோய் தடுப்பு விதிகளை பின்பற்றி முகக்கவசம் அணிந்து பயணிக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. இன்று முதல் தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலில் உள்ளது.