சென்னை: தமிழகத்தில் முழு ஊரடங்கு அமலுக்கு வந்ததால் இன்று முதல் அரசு பேருந்துகள் இயங்க தடை விதிக்கப்பட்டுள்ளது இதனால் ராமேஸ்வரம் பேருந்து நிலையம் ஆட்கள் நடமாட்டமின்றி அமைதியாய் காட்சியளித்தது. மேலும் உள்ளூர் மக்கள் ஊரடங்கு கடைபிடித்ததால் ராமநாதசுவாமி கோயில் நான்கு ரத வீதி மக்களின் நடமாட்டம் இன்றி வெறிச்சோடியது.