சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை: அமைச்சரவைக் கூட்டத்தில் நேற்று கொரோனா நோய்த் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக விவாதிக்கப்பட்டது. அக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவிற்கிணங்க, கொரோனா தொற்று அதிகமாக உள்ள மாவட்டங்களில் சிறப்புக் கவனம் செலுத்திடவும், அரசால் அறிவிக்கப்பட்டுள்ள ஊரடங்கினை முழுமையாக நடைமுறைப்படுத்துவதை உறுதி செய்திடவும், அமைச்சர்களை, முதல்வர் நியமித்துள்ளார்.
அதன்படி சென்னை மாவட்டத்திற்கு சுகாதாரத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், இந்து அறநிலையத் துறை அமைச்சர் பி.கே. சேகர்பாபு, செங்கல்பட்டு மாவட்டத்திற்கு ஊரகத் தொழில் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன், கோவை மாவட்டத்திற்கு உணவு துறை அமைச்சர் அர.சக்கரபாணி, வனத் துறை அமைச்சர் ராமச்சந்திரன், திருவள்ளூர் மாவட்டத்திற்கு பால்வளத் துறை அமைச்சர் சா.மு.நாசர், மதுரை மாவட்டத்திற்கு வணிக வரி மற்றும் பதிவுத் துறை அமைச்சர் பி.மூர்த்தி, நிதி துறை அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், தூத்துக்குடி மாவட்டத்திற்கு சமூக நலன், மகளிர் உரிமைத் துறை அமைச்சர் கீதா ஜீவன்,