ஆவடி: அம்பத்தூர் மண்டல அலுவலகத்தில் கொரோனா தடுப்பு பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு கண்காணிப்பு அலுவலர் சுரேஷ்குமார் ஐஏஎஸ் தலைமை வகித்து அதிகாரிகளிடம் தடுப்புப்பணிகள் குறித்து கேட்டறிந்தார். இந்த கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட அம்பத்தூர் தொகுதி எம்எல்ஏ ஜோசப் சாமுவேல் பேசினார். அப்போது அவர் வைத்த கோரிக்கை விவரம்; அத்திப்பட்டு கொரோனா வார்டு சிகிச்சை மையத்தில் ஆம்புலன்ஸ் வசதியை அதிகப்படுத்த வேண்டும். கொரோனா தடுப்பூசியின் பற்றாக்குறையை தடுக்கவேண்டும். அனைவருக்கும் தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்க வேண்டும்.