டெல்லி: கொரோனா சூழலை கருத்தில் கொண்டு தமிழகத்திற்கு ரூ.533.2 கோடி ஒதுக்கி மத்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. தமிழகம் உள்ளிட்ட 25 மாநிலங்களின் உள்ளாட்சி அமைப்புகளுக்கு ரூ.8,923.8 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதிகபட்சமாக உத்தரப்பிரதே மாநிலத்திற்கு ரூ.1,441.6 கோடியை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது.