முக்கிய செய்தி சென்னை மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று கூடுகிறது முதல் அமைச்சரவை கூட்டம்: முக்கிய விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்படும் என தகவல் May 09, 2021 எம்.கே. ஸ்டாலின் சென்னை: சென்னை தலைமைச்செயலகத்தில் இன்று காலை 11.30 மணியளவில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. கடந்த 3-ம் தேதி தமிழக முதல்வராக மு.க.ஸ்டாலினும், அமைச்சர்கள் 32 பேரும் பதவி ஏற்றனர். எனேவ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் முதல் அமைச்சரவை கூட்டம் இதுவாகும். இந்த புதிய ஆட்சி தொடங்கிய 3-ம் நாளான இன்று அவசரமாக அமைச்சரவை கூட்டப்படுகிறது. தற்போது கொரோனா 2-ம் அலை மிக வேகமாக பரவி வருகிறது. இந்நிலையில் இதை குறைக்கும் விதமாக தமிழக அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. மேலும் 10-ம் தேதி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. கொரோனா தொடர்பாக ஆலோசனை நடத்த இன்று முதல்வர் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற உள்ளது. கொரோனா உள்ளிட்ட முக்கிய விவகாரங்கள் குறித்து இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என தகவல் கூறப்படுகிறது.
சித்திரா பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கம்: போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் தகவல்
காந்தி நகரில் போட்டியிடும் அமித் ஷாவுக்கு சொந்தமாக கார் இல்லை; ரூ.16 லட்சம் கடன் இருக்கு..! தேர்தல் பிரமாண பத்திரத்தில் தகவல்
மக்களவை தேர்தல்!: பல லட்சம் ரூபாய் செலவு செய்து சொந்த ஊரில் ஜனநாயக கடமையாற்றிய வெளிநாடு வாழ் தமிழர்கள்..!!
400 இடங்கள் என்று பாஜக காண்பித்து வந்த படம், முதல்கட்ட வாக்குப்பதிவின்போதே தோல்வி அடைந்துவிட்டது: தேஜஸ்வி யாதவ் விமர்சனம்
முதல்கட்ட வாக்குப்பதிவில் கிடைத்த தகவல் என்.டி.ஏ. அணிக்கு சாதகமாக உள்ளன: மகாராஷ்டிராவில் பிரதமர் நரேந்திர மோடி பேச்சு
ஒட்டுமொத்தமாக வாக்கு சதவீதம் குறைந்திருப்பது அனைவருக்கும் கவலை அளிக்கக்கூடியதுதான்: தமிழிசை சௌந்தரராஜன் பேட்டி
நாம் வாக்களித்தால் என்ன மாற்றம் வரப்போகிறது என்ற எண்ணம் தான் வாக்கு சதவீதம் குறைய காரணம் : ராதாகிருஷ்ணன் விளக்கம்
பிரபல எலக்ட்ரிக் கார் நிறுவனமான டெஸ்லா அதிபர் எலான் மஸ்க்கின் இந்திய பயணம் ஒத்திவைப்பு: பாஜகவினர் ஏமாற்றம்?
கெஜ்ரிவால் சாப்பிட்டது சர்க்கரை இல்லாத இனிப்புகள்: அமலாக்கத்துறை குற்றச்சாட்டுக்கு அவரது தரப்பு மறுப்பு
கொளுத்திய கடும் வெயிலுக்கு இடையிலும் தமிழகத்தில் 72% வாக்குப்பதிவு: காலை 7 மணி முதல் மக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்களித்தனர்