சமையலறையில் பதுங்கிய சிறுத்தை: வனத்துறை மீட்டனர்

பெங்களூரு: கர்நாடக மாநிலம் சித்ரதுர்கா மாவட்டம் முத்தாபுரா கிராமத்தை சேர்ந்த சிதானந்தா, தொழிலாளி. இந்த கிராமத்தை யொட்டி வனப்பகுதி உள்ளது. நேற்று காலையில் சிதானந்தா வீட்டின்  சமையல் அறையில் பானைகளுடன் பானையாக சிறுத்தை ஒன்று பதுங்கி இருந்துள்ளது. சமையல் வேலைக்காக சென்ற போது சிறுத்தையின் உறுமல் சத்தம் கேட்டதால்  சதானந்தா குடும்பத்தை சேர்ந்த அனைவரும் உயிரை கையில் பிடித்துக்கொண்டு வெளியே ஓடி வந்தனர். சிறுத்தை வெளியே வராதபடி சிதானந்தா கதவை வெளிப்புறமாக பூட்டியதால் அது உள்ளே சிக்கிக்கொண்டது. சதானந்தா வீட்டில் சிறுத்தை சிக்கிய சம்பவம் அந்த பகுதியில் வேகமாக பரவியது. தகவல் கிடைத்த வனத்துறை அதிகாரிகள் கூண்டுடன் வந்து வீட்டில் சிக்கிய சிறுத்தையை பிடித்து அதை பாதுகாப்பாக வனப்பகுதியில் திறந்து விட்டனர்.

Related Stories: