காருக்குள் 4 குழந்தைகள் மூச்சுத்திணறி பலி

லக்னோ: உத்தரப்பிரதேச மாநிலம் பாக்பட் மாவட்டத்திலுள்ள சிங்கவுலி கிராமத்தில் அனில் தியாகி என்பவர் வசித்து வருகிறார். அவர், வீட்டுக்கு வெளியே தன்னுடைய காரை நிறுத்தியிருந்தார். நேற்று முன் தினமான இவரது காருக்குள் 4 குழந்தைகள் விளையாடிக் கொண்டிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக கார் கதவு பூட்டிக்கொண்டதில் 4 குழந்தைகளும் மூச்சுத் திணறி பரிதாபமாக உயிரிழந்தனர். இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். குழந்தைகளின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளன.

Related Stories: