திருவனந்தபுரம்: கேரள மாநிலம் ஆலப்புழா அருகே உள்ள புன்னப்ரா கூட்டுறவு பொறியியல் கல்லூரி விடுதி கொரோனா சிகிச்சை மையமாக மாற்றப்பட்டுள்ளது. இங்கு 87 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அங்கு தங்கி இருப்பவர்களுக்கு உணவு கொடுப்பதற்காக டிஒய்எப்ஐ இயக்கத்தை சேர்ந்த அஷ்வின் (23), ரேகா (21) ஆகியோர் சென்றனர். அப்போது தமிழ்நாடு கரூரை சேர்ந்த ஒரு வாலிபர் மூச்சுதிணறல் ஏற்பட்டு உயிருக்கு போராடிக்கொண்டிருந்தார். அஷ்வினும், ரேகாவும், தங்களது பைக்கில் வைத்து வாலிபரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முடிவு செய்தனர். அவர்கள் கவச உடை அணிந்து வந்திருந்தனர். இதனால் கொரோனா வார்டுக்கு சென்று உயிருக்கு போராடி கொண்டிருந்த வாலிபரை வெளியே தூக்கி வந்து பைக்கில் அமர வைத்தனர். அஷ்வின் பைக்கை ஓட்டினார்.