திருவில்லிபுத்தூர்: சித்திரை ரேவதியை முன்னிட்டு திருவில்லிபுத்தூர் ஆண்டாள் அணிவித்த பட்டு வஸ்திரங்கள் திருச்சி ஸ்ரீரங்கம் கோயில் கொண்டு செல்லப்பட்டன. ஒவ்வொரு ஆண்டும் சித்திரை மாதத்தில் வரும் ரேவதி நட்சத்திரம் திருச்சி ஸ்ரீரங்கநாதர் பிறந்த தினமாகும். இந்த நட்சத்திரத்தில் திருவில்லிபுத்தூர் ஆண்டாள் அணிவித்த பட்டு வஸ்திரங்களை அணிந்து ஸ்ரீரங்கநாதர் பக்தர்களுக்கு காட்சி அளிப்பார். நாளை (மே 9) ஸ்ரீரங்கநாதர் பிறந்த நட்சத்திரமான சித்திரை ரேவதி வருகிறது.