சிம்லா: அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் ஆகிய இருவர் பெயரிலும், போலி இ-பாஸ் பெற்ற விவகாரத்தில் போலீசார் சம்பந்தப்பட்ட நபர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர். கொேரானா இரண்டம் அலை வேகமெடுத்துள்ளதால், இமாச்சல பிரதேச மாநிலத்திற்குள் நுழைவதற்கு ‘இ-பாஸ்’ கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கொரோனா நெகடிவ் சான்று பெற்ற வெளிமாநிலத்தவர்களுக்கு மட்டுமே ‘இ-பாஸ்’ வழங்கப்படுகிறது. அவ்வாறு வெளிமாநிலத்தில் இருந்து வருவோர், 7 நாட்கள் தனிமைப்படுத்தப்படுவர் என்ற நடைமுறை அமலில் உள்ளது. இந்நிலையில், அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன் ஆகியோரின் பெயர்களில், இரண்டு இ-பாஸ்கள் வழங்கப்பட்டுள்ளன.