சென்னை : சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்த பிறகு மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், தற்போதைய சூழலில் நோயாளிகள் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால் ரெம்டெசிவர் மருந்துக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. சென்னை கீழ்ப்பாக்கத்தில் மட்டுமே அந்த மருந்து விற்பனை செய்யப்படுவதால் மக்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகின்றனர். இதன் காரணமாக, தற்போது 5 மாவட்டங்களில் ரெம்டெசிவர் மருந்து விற்பனை செய்ய சுகாதாரத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. மதுரை, கோவை, சேலம், திருநெல்வேலி உள்ளிட்ட 5 மாவட்டங்களில் நாளை முதல் ரெம்டெசிவர் மருந்து விற்பனை செய்யப்படும்