சென்னை: முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றுக் கொண்டதை தொடர்ந்து, 33 அமைச்சர்களும் தலைமை செயலகத்தில் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட அறைகளுக்கு சென்று நேற்று பொறுப்பேற்றுக் கொண்டனர். தமிழகத்தின் முதல்வராக மு.க.ஸ்டாலின் நேற்று காலை சென்னை, கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் பதவியேற்றார். இதை தொடர்ந்து தலைமை செயலகம் வந்த மு.க.ஸ்டாலின், முதல் மாடியில் உள்ள முதல்வரின் அலுவலகம் சென்று பொறுப்பேற்றுக் கொண்டார். பொறுப்பேற்ற உடனே தேர்தலில் அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் 5 முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். இதையடுத்து, புதிதாக நேற்று பதவியேற்றுக் கொண்ட நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன், நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சராக கே.என்.நேரு, கூட்டுறவு துறை அமைச்சராக பெரியசாமி,