சென்னை: இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர்மொகிதீன் நேற்று வெளியிட்ட அறிக்கை: ஆறாவது முறையாக தி.மு.க. ஆட்சி மு.க.ஸ்டாலின் தலைமையில் தொடங்கியுள்ளது. இந்த நல்லாட்சி தொடர்ந்து இதுவரை வரலாறு காணாத அற்புதங்களை படைத்திட வாழ்த்துவோம். தமிழகத்தில் உள்ள எல்லா சமூகத்தின் பிரதிநிதிகளும் அமைச்சரவையில் இடம்பெற்றிருப்பது முதலமைச்சரின் சமூகப் பார்வை மிகவும் தெளிவானது என்பதை நிரூபித்திருக்கிறது. தமிழக அமைச்சரவையில் முஸ்லிம் பிரதிநிதியே இல்லாமல் இருந்த காலமும் இருந்தது. கர்மவீரர் காமராஜர் காலத்தில்தான் முஸ்லிம் அமைச்சர் வரலாறு துவங்கியது. அதற்குப் பின்னர் பேரறிஞர் அண்ணா காலத்தில் இந்த வரலாறு சிறப்பாக தொடர்ந்தது.