சென்னை: சமூக நலத்துறை செயலாளரும், கூடுதல் தலைமைச் செயலாளருமான தயானந்த் கட்டாரியா நேற்று வெளியிட்டுள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது: தேர்தல் அறிக்கையில் தமிழகம் முழுவதும் இலவசமாக உள்ளூர் பேருந்துகளில் (நகர பேருந்து) மகளிருக்கு கட்டணமில்லா பயண வசதி அளிக்கப்படும் என வாக்குறுதி வழங்கப்பட்டுள்ளது. பணிபுரியும் மகளிர், உயர் கல்வி பயிலும் மாணவியர் சுமார் 40 சதவீதம் பேர் நகர பேருந்துகளில் பயணம் மேற்கொள்ள வாய்ப்பு உள்ளதால், நகர பேருந்துகளில் இலவச பயணச் சலுகை வழங்குவதன் மூலம் அரசு போக்குவரத்து கழகங்களுக்கு ஆண்டொன்றுக்கு சுமார் ரூ.1,200 கோடி வருவாய் இழப்பு ஏற்படக்கூடும் என கருதப்படுகிறது.