சென்னை: தமிழகம் முழுவதும் முகக்கவசம் அணியாமல் சுற்றிவந்ததாக நேற்று ஒரே நாளில் மட்டும் 27 ஆயிரம் பேர் மீது வழக்கு பதிவு ெசய்து அபராதமாக போலீசார் ரூ.55.31 லட்சம் வசூலித்துள்ளனர். தமிழகம் முழுவதும் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் தமிழக அரசு உத்தரவுப்படி மாநிலம் முழுவதும் முகக்கவசம் அணியாமல் பொது இடங்களில் சுற்றி வரும் நபர்கள் மற்றும் சமூக இடைவெளி கடைபிடிக்காத நபர்கள் மீது தமிழக காவல்துறை வழக்கு பதிவு செய்து அபராதம் விதித்து வருகிறது.