போதிய இருக்கைகள் நிரம்பாததால் சிறப்பு ரயில்கள் ரத்து

சென்னை: தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: நிஜாமுதீன்-சென்னை சென்ட்ரல் இடையே இயக்கப்பட்ட (ரயில் எண்: 02434) ராஜ்தானி சிறப்பு ரயில் வரும் 12ம் தேதி முதல் மறு அறிவிப்பு வரும் வரை ரத்து செய்யப்படுகிறது. அதேபோன்று மறுமார்க்கமாக சென்னை சென்ட்ரல்-நிஜாமுதீன் இடையே இயக்கப்பட்ட (ரயில் எண் 02433) ராஜ்தானி சிறப்பு ரயில் வரும் 14ம் தேதி முதல் மறுஅறிவிப்பு வரும் வரை ரத்து செய்யப்படுகிறது. இதுபோல, பித்ரகுண்டா-சென்னை சென்ட்ரல் இடையே இயக்கப்பட்ட (ரயில் எண் 07237) மற்றும் சென்னை சென்ட்ரல்-பித்ரகுண்டா இடையே இயக்கப்பட்ட (ரயில் எண் 02738) சிறப்பு ரயில்கள் 7ம் தேதி (நேற்று) முதல் 31ம் தேதி வரை முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: