முன்னாள் கவுன்சிலர் கொரோனாவுக்கு பலி

திருவொற்றியூர்:  மணலி வரதராஜன் தெருவை சேர்ந்தவர் கோபி (56). முன்னாள்  கவுன்சிலரான இவர், 18வது வார்டு திமுக வட்ட செயலாளர். இவருக்கு திருமணமாகி ஜெயலட்சுமி என்ற மனைவியும் பூஜா, சாய்பிரியா என்ற 2 மகள்களும் உள்ளனர். இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதையடுத்து, நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நேற்று காலை அவருக்கு திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டது. உடனடியாக கோபி, அதே மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். முன்னாள் கவுன்சிலர் உயிரிழந்தது, மணலி பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: