திருவனந்தபுரம்: கேரளாவில் கொரோனா பலி நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் மயானங்களில் உள்ள தகன மேடைகள் தொடர்ந்து எரிந்துகொண்டு இருக்கின்றன. திருவனந்தபுரம் மாநகராட்சியில் சடலத்தை எரிக்க 2 நாட்கள் வரை காத்திருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது கேரளாவில் கடந்த சில வாரங்களாக கொரோனா தொற்று மிக தீவிரமாக பரவி வருகிறது. கடந்த 4ம் தேதி முதல் கேரளா முழுவதும் மினி ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. ஆனால் நோய் பரவல் மேலும் மேலும் அதிகரிப்பதை தொடர்ந்து, இன்று முதல் 16ம் தேதி வரை 9 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமல்படுத்த கேரள அரசு தீர்மானித்துள்ளது. இதன்படி அத்தியாவசிய பொருட்கள் விற்கும் கடைகள் மட்டுமே காலை 6 முதல் இரவு 7.30 வரை திறக்க அனுமதிக்கப்படும். கேரளாவில் கடந்த இரு மாதங்களுக்கு முன்புவரை சராசரியாக மரண எண்ணிக்கை 30க்கும் குறைவாகவே இருந்தது. இந்த நிலையில் நேற்று முன்தினம் 63 பேர் இறந்தனர்.