புதுடெல்லி: நிழல் உலக தாதாவான சோட்டா ராஜன் இறந்ததாக வெளியான செய்தி தவறானது என்று என்று திகார் சிறை நிர்வாகம் தெரிவித்துள்ளது. பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையதாக கடந்த 2015ம் ஆண்டு தாய்லாந்தின் மாலி தீவில் கைது செய்யப்பட்ட நிழல் உலக தாதா சோட்டா ராஜன், இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டு டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவர் கடந்த ஏப்ரல் 22 அன்று திகார் சிறையில் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து ராஜன் ஏப்ரல் 24ம் தேதி எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.இந்நிலையில், சோட்டா ராஜன் இறந்துவிட்டதாக செய்தி பரவியது. ஆனால், இந்த செய்தி வெறும் புரளி என சிறைத்து இயக்குநர் ஜெனரல் சந்தீப் கோயல் தெரிவித்தார்.