மோடி அரசின் செயல்பாடின்மை மற்றும் திறமையின்மை காரணமாக, கொரோனா அலையில் நாடு மூழ்கிக் கொண்டிருக்கிறது. - காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி
அதிமுக, பாஜ ஆட்சிகளின் தவறான நடவடிக்கைகளின் விளைவாக கொரோனா தொற்று மற்றும் பொருளாதார நெருக்கடியில் தமிழகம் தத்தளிக்கிறது. - மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன்
முதல்வராக பொறுப்பேற்ற பிறகு மு.க.ஸ்டாலின் அறிவித்த ஐந்து அறிவிப்புகளும் பொற்கால ஆட்சி தொடங்கி விட்டது என்ற நம்பிக்கையை விதைத்து இருக்கிறது. - மதிமுக பொதுச்செயலாளர் வைகோதென் மாநிலங்களில் முதலில் கர்நாடகாவில் பாஜ ஆட்சி அமைத்துள்ளது. 2வதாக புதுவையிலும் ஆட்சி அமைத்திருப்பது பாஜவுக்கு பெரும் மகிழ்ச்சியாகும். - மத்திய அமைச்சர் கிஷன் ரெட்டி