முக்கிய செய்தி சென்னை தமிழகத்தில் கூடுதல் கட்டப்பாடுகளுடன் முழு ஊரடங்கா? மாவட்ட ஆட்சியர் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் May 07, 2021 தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் சென்னை: தமிழகத்தில் கூடுதல் கட்டப்பாடுகளுடன் ஊரடங்கை அமல்படுத்த அரசு பரிசீலித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஊரடங்கில் மேலும் கூடுதல் கட்டுப்பாடுகளை விதிக்க ஆட்சியர்கள் கூட்டத்தில் பரிந்துரை செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கை பற்றி மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார். தமிழகத்தில் 2 வாரங்களுக்கு மிகக் கடுமையான கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு குறித்த அறிவிப்பு இன்று இரவு நாளை காலை வெளியிட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. எனவே கொரோனா பரவலை தடுக்க பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அறிவித்து வருகிறது. தற்போது இரவு நேர ஊரடங்கு அமலில் உள்ளது. மேலும் ஞாயிற்றுக்கிழமைகளிலும் முழு ஊரடங்கு கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் சனி, மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் இறைச்சி கடைகள் வைக்கவும் அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது. இதற்கிடையில் மே 6 முதல் நண்பகல் 12 மணி வரை மட்டுமே கடைகள் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களான பால், மருந்தகம், பெட்ரோல் நிலையங்கள், அவசர ஊர்தி மட்டும் இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இருந்ந போதிலும் கொரோனா பாதிப்பு தினமும் அதிகரித்து வருகிறது. அதனால் தமிழகத்தில் கடும் கட்டுப்பாடுகளுடன் முழு ஊரடங்கு அமல்ப்படுத்தப்படுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
மதுரை கோயில் செங்கோல் உத்தரவை ரத்து செய்ய மறுப்பு.. ஒரே நாளில் உத்தரவு பிறப்பிக்க நாங்கள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல என நீதிபதிகள் காட்டம்!!
இனிப்பு வகைகளை வேண்டுமென்றே சாப்பிட்டு தனது சர்க்கரை அளவை அதிகரிக்கிறார் அரவிந்த் கெஜ்ரிவால்: அமலாக்கத்துறை குற்றசாட்டு
காசர்கோட்டில் மாதிரி வாக்குப் பதிவின்போது ஒருமுறை அழுத்தினால் பாஜகவுக்கு 2 வாக்குகள் விழுந்ததாக புகார் ஏதும் வரவில்லை : தேர்தல் ஆணையம்
பாரம்பரிய நடைமுறை பாதிப்பதோடு, பக்தர்கள் மனம் புண்படும்.. கள்ளழகர் திருவிழாவில் நீரை பீச்சி அடிக்க கட்டுப்பாடு விதித்த ஆட்சியர் ஆணைக்கு ஐகோர்ட் கிளை தடை..!!
வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்புடன் செயலாற்றினால்தான் இண்டியா கூட்டணியின் வெற்றி உறுதியாகும் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
நாளை ஜனநாயக திருவிழா.. மாலை 6 மணிக்குள் வரிசையில் நின்றால் வாக்களிக்கலாம்.. செல்போன் அனுமதி இல்லை.. 16 ‘பிங்க்’ வாக்குச்சாவடிகள் அமைப்பு!!
கேரளாவில் மாதிரி வாக்குப்பதிவில் பா.ஜ.க.வுக்கு 2 ஓட்டுகள் பதிவான விவகாரம்: தேர்தல் ஆணையம் உரிய விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு
கேரளாவில் நடந்த மாதிரி வாக்குப்பதிவின்போது பா.ஜ.க.வுக்கு வாக்களிக்க ஒரு முறை பட்டனை அழுத்தினால் 2 ஓட்டுகள் பதிவாவதால் அதிர்ச்சி..!!
தேர்தலை முன்னிட்டு நேற்று இயக்கப்பட்ட 2,899 பேருந்துகள் மூலம் சுமார் 1,48,800 பயணிகள் பயணித்துள்ளனர்: போக்குவரத்துக்கழகம் தகவல்
நாம் அனைவரும் ஒன்றிணைந்து பா.ஜ.க.வின் சித்தாந்தத்தை வீழ்த்துவோம்: காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி வேண்டுகோள்
“மீண்டும் மோடி வென்றால் நாடே மணிப்பூர் போன்று மாறும்” – நிர்மலா சீதாராமனின் கணவர் பரகல பிரபாகர் எச்சரிக்கை
தமிழ்நாடு மற்றும் புதுவையில் அனல் பறந்த பிரசாரம் ஓய்ந்தது: சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின், சேலத்தில் எடப்பாடி பிரசாரத்தை முடித்தனர்; நாளை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது
நேற்று 29 நக்சல்கள் சுட்டுக் கொலை: விரைவில் நக்சல் இல்லாத இந்தியா உருவாகும்.! போலீசுக்கு அமித் ஷா பாராட்டு