இந்தியா உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி எம்.ஒய் இக்பால் உடல்நலக்குறைவால் காலமானார்..!! May 07, 2021 முன்னாள் உச்ச நீதிமன்றம் எம் ஒய் இக்பால் சென்னை உயர்நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதியும், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதியுமான எம்.ஒய். இக்பால் உடல்நலக்குறைவால் காலமானார். கடந்த 1951ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 13ம் தேதி பிறந்தவர் இக்பால். அவருக்கு வயது 70. டெல்லியில் வசித்து வந்த இக்பால், ராஞ்சி பல்கலைக்கழகத்தில் இளநிலை அறிவியல் பட்டம் முடித்துள்ளார். வழக்கறிஞர் படிப்பில் தங்க பதக்கமும் பெற்றுள்ளார். கடந்த 1975ம் ஆண்டு சிவில் நீதிமன்றத்தில் தனது பயிற்சியை தொடங்கிய அவர், கடந்த 1993ம் ஆண்டு பாட்னா உயர்நீதிமன்ற ராஞ்சி கிளையில் அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். பின்னர் கடந்த 1996ம் ஆண்டு பாட்னா உயர்நீதிமன்ற நீதிபதியாகவும் கடந்த 2000ம் ஆண்டு நவம்பர் மாதம் ஜார்கண்ட் உயர்நீதிமன்ற நீதிபதியாகவும் நியமனம் செய்யப்பட்டார். கடந்த 2010ம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக நியமிக்கப்பட்ட எம்.ஒய். இக்பால், படிப்படியாக உயர்ந்து 2012ம் ஆண்டில் உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டார். தொடர்ந்து, 2016ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பணியில் இருந்து ஓய்வு பெற்ற அவர், உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டு டெல்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், தனது 70வது வயதில் இன்று காலமானார்.
கெஜ்ரிவால் கைது குறித்து விமர்சித்த நிலையில் காங்கிரசின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து மீண்டும் அமெரிக்கா கருத்து: ஒன்றிய வெளியுறவு துறை கண்டனம்
ஆந்திராவில் வினோதம் ரதி மன்மதன் கோயிலில் பெண் வேடமிட்டு வழிபாடு செய்யும் இளைஞர்கள்: ‘குடும்ப நலம், ஆரோக்கியம் கிடைக்கும்’
டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஏப்.1 வரை காவல் நீட்டிப்பு: டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் அனுமதி
காங்கிரஸ் கட்சியின் மேல்முறையீட்டு வழக்கு; வரி மறுமதிப்பீட்டு நடவடிக்கைக்கு எதிரான மனு தள்ளுபடி: டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவு
“ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த மிகப்பெரிய சதி”.. டெல்லி முதலமைச்சர் அர்விந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு..!!
டெல்லியில் குடியரசுத்தலைவர் ஆட்சியை அமல்படுத்த மிகப்பெரிய சதி நடப்பதாக அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டு!
டெல்லி முதல்வரை பதவியில் இருந்து நீக்க உத்தரவிட முடியாது.. கெஜ்ரிவால் கைது விவகாரத்தில் ஐகோர்ட் அதிரடி..!!
நடப்பாண்டில் அதிகமான வெப்ப அலை வீசும்.. கோடை வெப்பத்தை சமாளிக்கும் அறிவுறுத்தல்களை வெளியிட்ட தேர்தல் ஆணையம்!!
தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி வழங்குவது உலகின் மிகப்பெரிய ஊழல்: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் கணவர் பரகலா பிரபாகர் கருத்து
தமிழ்நாட்டில் ஏற்கனவே போட்டியிட்டு 1.16% வாக்குகளை பெற்றுள்ளதை குறிப்பிட்டு, பானை சின்னம் கேட்டு விசிக, டெல்லி உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு!!
மூன்றாவது முறையாக அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை நிராகரித்தார் திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் மஹுவா மொய்த்ரா !!
100 நாள் வேலை திட்ட ஊதியத்தை உயர்த்தி ஒன்றிய அரசு அரசாணை வெளியீடு : தமிழகம், புதுச்சேரியில் தினசரி ஊதியம் ரூ.319 ஆக உயர்வு!!
நடப்பு நிதியாண்டில் போலி ஆவணங்கள் மூலம் ரூ.20,000 கோடி வரி ஏய்ப்பு: கடந்தாண்டை விட 50% அதிக மோசடி என தகவல்