முக்கிய செய்தி இந்தியா கேரளாவில் இடதுசாரி கூட்டணி பெரும்பான்மை பெற்றுள்ள நிலையில் புதிய அமைச்சரவை 20ல் பதவியேற்பு May 07, 2021 கேரளா இடது கூட்டணி திருவனந்தபுரம்: கேரளாவில் இடது முன்னணி அமைச்சரவை வரும் 20ம் தேதி பதவி ஏற்கவுள்ளது. கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான இடது முன்னணி 99 தொகுதிகளில் வெற்றிபெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றியுள்ளது. இதையடுத்து முதல்வர் பினராயி விஜயன் மீண்டும் முதல்வராக பதவியேற்க உள்ளார். இடதுசாரி கூட்டணி பெரும்பான்மை பெற்றுள்ள நிலையில், இந்த வாரமே பதவி ஏற்பு விழா நடக்கும் என முதலில் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கேரளாவில் கொரோனா பரவல் தீவிரமாக இருப்பதால், 2 வாரங்களுக்கு பின்னரே பதவியேற்பு விழா நடக்கும் என தகவல்கள் வெளியாயின.இதற்கிடையே கம்யூனிஸ்ட் கூட்டணி கட்சிகளிடையே, அமைச்சர்களை தேர்வு செய்வது தொடர்பான ஆலோசனை கூட்டங்கள் கடந்த சில தினங்களாக நடந்து வந்தன. அமைச்சரவையில் புதுமுகங்களுக்கும், பெண்களுக்கும் கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்படும் என கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று திருவனந்தபுரத்தில் மார்க்சிஸ்ட் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முக்கிய தலைவர்கள் கலந்து கொண்ட ஆலோசனை கூட்டம் நடந்தது. இதில் வரும் 20ம் தேதி புதிய அமைச்சரவை பதவி ஏற்பு விழாவை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
நாளை ஜனநாயக திருவிழா.. மாலை 6 மணிக்குள் வரிசையில் நின்றால் வாக்களிக்கலாம்.. செல்போன் அனுமதி இல்லை.. 16 ‘பிங்க்’ வாக்குச்சாவடிகள் அமைப்பு!!
கேரளாவில் மாதிரி வாக்குப்பதிவில் பா.ஜ.க.வுக்கு 2 ஓட்டுகள் பதிவான விவகாரம்: தேர்தல் ஆணையம் உரிய விசாரணை நடத்த உச்ச நீதிமன்றம் உத்தரவு
கேரளாவில் நடந்த மாதிரி வாக்குப்பதிவின்போது பா.ஜ.க.வுக்கு வாக்களிக்க ஒரு முறை பட்டனை அழுத்தினால் 2 ஓட்டுகள் பதிவாவதால் அதிர்ச்சி..!!
தேர்தலை முன்னிட்டு நேற்று இயக்கப்பட்ட 2,899 பேருந்துகள் மூலம் சுமார் 1,48,800 பயணிகள் பயணித்துள்ளனர்: போக்குவரத்துக்கழகம் தகவல்
நாம் அனைவரும் ஒன்றிணைந்து பா.ஜ.க.வின் சித்தாந்தத்தை வீழ்த்துவோம்: காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி வேண்டுகோள்
“மீண்டும் மோடி வென்றால் நாடே மணிப்பூர் போன்று மாறும்” – நிர்மலா சீதாராமனின் கணவர் பரகல பிரபாகர் எச்சரிக்கை
தமிழ்நாடு மற்றும் புதுவையில் அனல் பறந்த பிரசாரம் ஓய்ந்தது: சென்னையில் முதல்வர் மு.க.ஸ்டாலின், சேலத்தில் எடப்பாடி பிரசாரத்தை முடித்தனர்; நாளை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது
நேற்று 29 நக்சல்கள் சுட்டுக் கொலை: விரைவில் நக்சல் இல்லாத இந்தியா உருவாகும்.! போலீசுக்கு அமித் ஷா பாராட்டு
ஒன்றிய அரசின் 18 சதவீத ஜிஎஸ்டியால் மதுரையில் ‘மங்கும்’ பாத்திர வியாபாரம்: 50% வரை தொழில் பாதிப்பு என வியாபாரிகள் வேதனை
கோகுல்ராஜ் ஆணவ கொலையில் ஆயுள் தண்டனை பெற்ற யுவராஜுக்கு சிறையில் முதல் வகுப்பு கேட்டு மனைவி மனு: சிறை நிர்வாகம் பதில்தர உயர் நீதிமன்றம் உத்தரவு
ஏழைகளின் சுருக்குப் பையில் உள்ள பணத்தைக் கூட எப்படி பறிக்கலாம் என்று மோடி அரசு செயல்பட்டுவருகிறது: முதல்வர் மு.க.ஸ்டாலின் பரப்புரை
முதற்கட்ட மக்களவை தேர்தல் : தமிழ்நாடு, புதுச்சேரி உள்பட 102 தொகுதிகளுக்கான பிரச்சாரம் ஓய்ந்தது.! நாளை மறுநாள் வாக்குப்பதிவு
மகளிர் உரிமை திட்டத்தில் 8 மாதங்களில் 1.15 கோடி மகளிருக்கு மாதம் ரூ.1,000 வீதம் ரூ.9,200 கோடி வழங்கி உள்ளோம்: திமுக பெருமிதம்