தமிழகம் தமிழக அமைச்சரவையில் நீர்பாசனத்துறைக்கு தனி அமைச்சகம்!: காவிரி டெல்டா மாவட்ட மக்கள் வரவேற்பு..!! May 07, 2021 தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் காவிரி டெல்டா மாவட்டம் தஞ்சை: தமிழக அமைச்சரவையில் நீர்பாசனத்துறைக்கு என தனி அமைச்சகம் அமைக்கப்பட்டிருப்பதற்கு தஞ்சை மாவட்ட மக்கள் வரவேற்று மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். தமிழகத்தின் புதிய அமைச்சரவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று பதவியேற்றது. கிண்டி ராஜ்பவனில் எளிமையான முறையில் இந்த பதவியேற்பு விழா நடந்தது. தொடர்ந்து, முதல்வருடன் மேலும் 33 அமைச்சர்களும் பொறுப்பேற்றுள்ள நிலையில், அதில் நீர்பாசனத்துறைக்கு தனி அமைச்சகம் திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழக அமைச்சரவையில் நீர்பாசனத்துறைக்கு தனி அமைச்சகம் அமைக்கப்பட்டிருப்பதற்கு காவிரி டெல்டா மாவட்ட மக்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இதனால் தங்களது நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியுள்ளதாகவும், அண்டை மாநிலங்களுடன் தமிழகத்தின் நதிநீர் பங்கீடு பிரச்சனைகள் தீர இதன் மூலம் வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தஞ்சை மாவட்ட மக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். தமிழகத்தில் இதுவரை பொதுப்பணித்துறையின் கீழ் நீர்பாசன திட்டங்கள் செயல்பட்டு வந்த நிலையில், இனிமேல் நீர்பாசனத்துறைக்கு தனி அமைச்சகமாக செயல்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
வடலூர் வள்ளலார் சர்வதேச மையம் அமைய உள்ள பகுதியை தொல்லியல் துறை ஆய்வு செய்து அறிக்கை அளிக்க ஐகோர்ட் உத்தரவு!!
கோவை மாவட்டத்தில் வெப்ப அலை வீசக்கூடும் என்பதால் பொதுமக்கள் வெளியே வர வேண்டாம்: மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தல்
மோடி மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்காவிடில் உச்சநீதிமன்றத்தை அணுகுவதை தவிர வேறு வழியில்லை: ஆர்.எஸ்.பாரதி
உணவாக டிரை ஐஸ் பயன்படுத்துவோருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை, ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்படும் : உணவுப் பாதுகாப்புத்துறை எச்சரிக்கை!!
ஸ்மோக் பிஸ்கட்(Smoke Biscuits) குழந்தைகள் உட்கொள்ள வேண்டாம், அது உயிருக்கு ஆபத்து: உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை
கோவை தண்டு மாரியம்மன் கோயிலில் சித்திரைத் திருவிழா: அலகு குத்தி, சக்தி கரகம், அக்னி சட்டி எடுத்து பக்தர்கள் ஊர்வலம்!