தமிழகம் முதல்வராக பதவியேற்ற ஸ்டாலின்!: தமிழகமே விழாக்கோலம்..பட்டாசு வெடித்து, இனிப்பு வழங்கி மக்கள் உற்சாக கொண்டாட்டம்..!! May 07, 2021 ஸ்டாலின் தமிழக விழா பட்டாசு திருவாரூர்: தமிழக முதலமைச்சராக மு.க ஸ்டாலின் பதவியேற்றதை மாநிலம் முழுவதும் திமுக தொண்டர்களும், பொதுமக்களும் உற்சாகத்துடன் கொண்டாடி வருகின்ற்னர். திருவாரூர் பழைய பேருந்து நிலையத்தில், திமுக நகர செயலாளர் பிரகாஷ் தலைமையில், ஏராளமானோர் பட்டாசுகளை வெடித்தும், இனிப்புகளை வழங்கியும் கொண்டாடினர். தமிழக முதலமைச்சராக மு.க ஸ்டாலின் பதவியேற்றதை தொடர்ந்து திமுகவினர் மதுரையில் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினர். கோவை மாவட்டம் பேரூர் பகுதியில் திமுகவினர் ஊர்வலமாக சென்று அந்த பகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்து கொண்டாடி மகிழ்ந்தனர். சேலம் பழைய பேருந்து நிலையத்தில் உள்ள அண்ணா சிலைக்கு மாலை அணிவித்த திமுகவினர் 500 ஏழை, எளிய மக்களுக்கு புத்தாடைகளை வழங்கினர். ஈரோட்டில் திமுக வழக்கறிஞர் அணியினர் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். கொரோனா விதிகளை பின்பற்ற வலியுறுத்தி பொதுமக்களுக்கு முகக்கவசங்களையும் அவர்கள் வழங்கினர். முன்னாள் முதலமைச்சர் பழனிசாமியின் சொந்த ஊரான எடப்பாடியில் பேருந்து நிறுத்தம் அருகே திமுகவினர் சமூக இடைவெளியை பின்பற்றி மக்களுக்கு இனிப்புகளை வழங்கினர். நத்தம், திண்டுக்கல், திருவண்ணாமலை, பரமத்திவேலூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து நகரங்களிலும் திமுக நிர்வாகிகளின் தொண்டர்கள் மு.க. ஸ்டாலின் தமிழக முதலமைச்சராக பொறுப்பேற்றிருக்கும் தருணத்தை உற்சாகம் பொங்க கொண்டாடி வருகின்றனர்.
வாக்காளர் பட்டியலில் பெயர் இருக்கிறதா, இல்லையா விவகாரம் அரசியல் கட்சிகளுக்கு தான் அதிக பொறுப்பு உள்ளது: முன்னாள் தேர்தல் ஆணையர் கோபால்சாமி கருத்து
விழுப்புரம் அருகே இரண்டு பேரை கொன்ற வழக்கு வழக்கறிஞர், போலீஸ்காரர், அரசு அதிகாரி அதிமுக நிர்வாகி உள்பட 20 பேருக்கு ஆயுள்: விழுப்புரம் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
நாடாளுமன்ற தேர்தலுக்காக மத துவேஷ கருத்துகளை பேசுவது இறையாண்மைக்கு எதிரானது: பிரதமர் மோடிக்கு எடப்பாடி கடும் கண்டனம்
சேமநல நிதியில் இருந்து 16 காவலர் குடும்பத்திற்கு ரூ.31.52 லட்சம் நிதி உதவி: போலீஸ் கமிஷனர் வழங்கினார்
கோயம்பேடு மார்க்கெட்டில் ரசாயனத்தில் பழுக்க வைத்த ரூ.10 லட்சம் மதிப்பு மாம்பழம், வாழைப்பழங்கள் பறிமுதல்: உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி
பல்கலைக்கழக துணைவேந்தர் நியமன விவகாரம் அதிகார அமைப்புகள் பிரச்னையால் மாணவர்களின் கல்விதான் பாதிப்பு: சென்னை உயர் நீதிமன்றம் கவலை
திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமி விழா கோலாகலம் 25 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம்: 5 மணி நேரத்துக்கும் மேலாக வரிசையில் காத்திருந்து தரிசனம்