உச்சமடையும் கொரோனா பாதிப்பு!: ராஜஸ்தானில் வரும் 10ம் தேதி முதல் 24ம் தேதி வரை முழுஊரடங்கு அறிவிப்பு..!!

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநிலத்தில் கொரோனா பாதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருவதால் வரும் 10ம் தேதி முதல் 24ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. நாடு முழுவதும் கொரோனா வைரஸின் 2வது அலை கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக வடமாநிலங்களில் வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது. ராஜஸ்தான் மாநிலத்தை பொறுத்தவரையில், கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 17 ஆயிரத்து 532 பேருக்கு பாதிப்புகள் உறுதியாகியுள்ளது. அம்மாநிலத்தில் மொத்த பாதிப்பு 7 லட்சத்தை தாண்டியுள்ளது. 

மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 5,182 ஆக உயர்வடைந்துள்ளது. தொற்று அதிகரித்து வரும் நிலையில், ராஜஸ்தானில் வரும் 10ம் தேதி முதல் 24ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது. இந்த உத்தரவின்படி வருகின்ற 31ம் தேதிக்கு பின்னரே திருமணங்கள் நடத்த அனுமதி வழங்கப்படும் என  அறிவிக்கப்பட்டுள்ளது. நீதிமன்ற திருமணங்கள் மற்றும் 11 பேருக்கு குறைவானோர் கலந்து கொள்ள கூடிய வீட்டில் சிறிய அளவில் நடத்தப்படும் திருமணங்கள் ஆகியவற்றுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 

மத வழிபாட்டு தலங்கள் தொடர்ந்து மூடப்பட்டு இருக்கும்.  அவசர கால உதவியாக தனியார், அரசு வாகனங்கள் மட்டும் செயல்படும். மாநிலத்துக்கு இடையேயான சரக்கு வாகனங்களுக்கு அனுமதி. வெளிமாநிலத்திலிருந்து வருபவர்களுக்கு கொரோனா நெகட்டிவ் சான்றிதழ் கட்டாயம் உள்ளிட்ட பல்வேறு உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. 

Related Stories: