திருவொற்றியூர்: எர்ணாவூரில் நெஞ்சுவலியால் கணவர் இறந்த சில மணி நேரத்தில் மனைவியும் இறந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. எர்ணாவூரை சேர்ந்தவர் தியாகராஜன் (63). ஓய்வுபெற்ற மின்வாரிய ஊழியர். இவரது மனைவி ராஜலட்சுமி (53). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். ராஜலட்சுமிக்கு சில தினங்களுக்கு முன் உடல்நலக்குறைவு ஏற்பட்டு ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை தியாகராஜன் வீட்டில் தனியாக இருந்துள்ளார். இவரது மகன், மகள் ஆகியோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தாய் ராஜலட்சுமியை பார்த்துவிட்டு வீடு திரும்பினர்.