வால்பாறை: வால்பாறை அருகே உள்ளது உருளிக்கல் எஸ்டேட். இங்குள்ள பேருந்து நிறுத்தம் அருகே, தேயிலை தோட்டம் ஒன்றில் சிறுத்தை உயிரிழந்து கிடப்பதாக மானம்பள்ளி வனச்சரகத்திற்கு அப்பகுதி பொதுமக்கள் தகவல் அளித்தனர். இதன் பேரில், அப்பகுதிக்கு சென்ற வனத்துறையினர் சிறுத்தையின் உடலை கைப்பற்றி ஆய்வு செய்தனர்.ஆனைமலை புலிகள் காப்பக துணைகள இயக்குநர் உத்திரவின் பேரில், வனச்சரகர் மணிகண்டன் தலைமையிலும், உதவி வன பாதுகாகாவலர் செல்வம் மற்றும் பிரசாந்த் ஆகியோர் முன்னிலையில், நேற்று மாலை சிறுத்தையின் உடற்கூறு ஆய்வு சம்பவ இடத்திலேயே செய்யப்பட்டது.