போடி: போடி பகுதியில் வங்காரு சாமி கண்மாய், சிறுகுளம் கண்மாய், புதுக்குளம் கண்மாய், சங்கரப்ப நாயக்கன் கண்மாய், மீனாட்சியம்மன் கண்மாய் உள்ளன. போடி மற்றும் மேற்குத்தொடர்ச்சி மலையில் பெய்யும் மழைநீர் பல பாகங்களாக ஒன்று சேர்ந்து சாம்பலாற்று அணையில் மறுகால் பாய்ந்து கொட்டக்குடி ஆற்றில் வெள்ளமென பெருக்கெடுக்கும் போது இந்த கண்மாய்களில் தண்ணீர் நிரம்புகிறது. இந்த கண்மாய்களின் தண்ணீர் மூலம் பல ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுவதுடன், ஆழ்குழாய் பாசனத்திற்கும் பலன் கிடைக்கிறது.