திருவாரூர்: திருவாரூர் குளுந்தான் குளத்தில் வளர்ந்துள்ள ஆகாய தாமரை செடிளை அகற்ற நகராட்சி நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். குளங்களில் பரவி கிடக்கும் ஆகாய தாமரை நீரை அதிக அளவில் உறிஞ்சி நீர்நிலைகளின் தன்மையை அழித்து விடுகிறது. இதனால் எந்த பயனும் இல் லாமல் போய் விடுகிறது. ஆகாய தாமரை, உயிர்வாழ தண்ணீரை எளிதில் ஆவியாக்கி நீர்நிலையை வறண்டு போக வைத்து விடுகிறது. ஆகாய தாமரை நீரை ஆவியாக்கும் தன்மை கொண்டது. தண்ணீரில் மிதக்கும் இந்த தாவரம், தனது வேர்கள் தண்ணீரில் படர்ந்து வளர்வதன் மூலம் தொடர்ந்து நீர் நிலைகள் முழுவதும் பரவி விடுகிறது. மிக கனமாகவும், பசுமையானதாகவும் இலைகளை கொண்டிருக்கும் இந்த தாவரம் ஊதா நிறத்திலான பூக்களை கொண்டது.