சென்னை: வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு பல்வேறு இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அடுத்த 24 மணி நேரத்திற்குள் மேற்கு தொடர்ச்சி மலையோர மாவட்டங்கள், தென் மாவட்டங்களில் மழை பெய்ய கூடும் என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.