சென்னை: கொரோனா தடுப்பு பணிகள் மேற்கொள்ள ஒப்பந்த அடிப்படையில் ஓராண்டு காலம் பணிபுரிய லேப் டெக்னிசியன் மற்றும் எக்ஸ்ரே டெக்னிசியன் வேலைக்கு 6, 7ம் தேதிகளில் நேர்காணல் நடைபெறுகிறது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிரித்து வருகிறது. அதைப்போன்று சென்னையில் பாதிப்பு அதிகரித்து வருவதால் சென்னை, மாநகராட்சி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஏற்கனவே 12,500க்கும் மேற்ப்பட்ட முன்களப்பணியாளர்களை ஒப்பந்த அடிப்படையில் பணிநியனம் செய்து கொரோனாவை கட்டுப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அதைப்போன்று கடந்த வாரம் டாக்டர்கள், செவிலியர்கள் 320 பேர் ஒப்பந்த அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டுள்ளது.கொரோனா காலத்தில் பணிபுரிய மருத்துவர்கள் தேவை என்பதால் முதுகலை மருத்துவப்படிப்புக்கான நீட் தேர்வை 4 மாதங்களுக்கு ஒத்திவைப்பதாகப் பிரதமர் அலுவலகம் அறிவித்திருந்தது.