கிருஷ்ணகிரி: ஆந்திராவில் முழு ஊரடங்கு காரணமாக கிருஷ்ணகிரி மாவட்ட எல்லையில் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் கொaரோனாவின் 2வதுஅலை வேகமாக பரவி வருகிறது. தினமும் 3 லட்சத்திற்கும் அதிகமானோர் பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனர். தினசரி பலி எண்ணிக்கையும் 3 ஆயிரத்திற்கும் அதிகமாக உள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக பல மாநிலங்களில் முழு ஊரடங்கு மற்றும் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு வருகிறது.
ஆந்திராவிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதையடுத்து கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் இன்று பகல் 12 மணி முதல் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் கிருஷ்ணகிரியில் இருந்து காளிக்கோவில் வழியாக ஆந்திர மாநிலம் குப்பத்திற்கு செல்லும் சாலையில் போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.