நாளை முதல் 4 மணி நேரம் தான் டாஸ்மாக் கடைகள்: காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மட்டுமே இயங்கும்..! டாஸ்மாக் நிர்வாகம் அறிவிப்பு

சென்னை: தமிழகத்தில் நாளை முதல் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மட்டுமே டாஸ்மாக் இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வருகின்றன.

தமிழகத்தில் கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக 6ம் தேதி முதல் 15ம் தேதி வைரை புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்ட்டுள்ளன. அதன்படி, கடைகள் அலுவலகங்கள் உள்பட அனைத்து வணிக நிறுவனங்களும் மதியம் 12 மணி வரை இயங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும், மருந்தகங்கள், பால் விநியோகம் போன்ற அத்தியாவசிய பொருட்கள் வழக்கம் போல் செயல்படலாம்.மளிகை, காய்கறி கடைகள் குளிர்சாதன வசதியின்றி நண்பகல் 12 மணி வரை மட்டுமே இயங்கலாம் மளிகை மற்றும் காய்கறி கடைகள் தவிர மற்ற கடைகள் திறக்க அனுமதி இல்லை என தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில், டாஸ்மாக் கடைகள் திறந்திருக்கும் நேரமும் அறிவிக்கப்பட்டுள்ளது. நாளை முதல் காலை 8 மணி முதல் நண்பகல் 12 மணி வரை மட்டுமே டாஸ்மாக் கடைகள் இயங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுவதால் அன்று டாஸ்மாக் கடைகள் இயங்காது என அறிவிக்கப்பட்டது.

Related Stories: