இந்தியா மராத்தா இடஒதுக்கீட்டை உச்சநீதிமன்றம் ரத்து செய்திருப்பது துரதஷ்டவசமானது!: முதல்வர் உத்தவ் தாக்கரே வேதனை..!! May 05, 2021 உச்ச நீதிமன்றம் மராட்டிய முதல் அமைச்சர் உத்தம் தாக்கரே மும்பை: மராத்தா இடஒதுக்கீட்டை உச்சநீதிமன்றம் ரத்து செய்திருப்பது துரதஷ்டவசமானது என்று அம்மாநில முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். மராட்டிய அரசால் மராத்தா சமுதாயத்தினருக்கு வழங்கப்பட்ட தனி இடஒதுக்கீட்டை ரத்து செய்து உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு தீர்ப்பளித்தது. மராத்தா இடஒதுக்கீடு தொடர்பான வழக்குகளை விசாரித்த உச்சநீதிமன்ற நீதிபதி அசோக் பூஷன் தலைமையிலான 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் அமைப்புக்கு அமர்வு மராத்தா தனி இடஒதுக்கீடு சட்டத்தை ரத்து செய்து தீர்ப்பளித்தது. மராட்டிய அரசு நிறைவேற்றிய மராத்தா தனி இடஒதுக்கீடு சட்டம் 50 சதவீத இட ஒதுக்கீடு வரம்பை தாண்டுவதால் அது அரசியலமைப்புக்கு எதிரானது என்று நீதிபதிகள் கூறியுள்ளனர். 50 சதவீத இட ஒதுக்கீடு வரம்பை தாண்டி மராத்தா சமூகத்தினருக்கு தனி ஒதுக்கீடு வழங்க அசாதாரண சூழல் இல்லை என்று நீதிபதிகள் குறிப்பிட்டனர். மராத்தா சமூகத்தினரை சமூக, பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் பட்டியலில் சேர்க்க மராட்டிய அரசு கூறிய காரணங்களை ஏற்க மறுத்துவிட்ட உச்சநீதிமன்ற நீதிபதிகள் அவர்களுக்கு தனி இடஒதுக்கீடு வழங்கியது அனைவருக்கும் சம உரிமை என்ற அரசியலமைப்பு சட்டத்தை மீறிய நடவடிக்கை என்று கூறியுள்ளனர். மேலும் 102ஆவது சட்டத்திருத்தத்தின்படி சமூக மற்றும் பொருளாதாரத்தில் பிற்படுத்தப்பட்டவர்கள் யார் என்பதை தீர்மானிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கே இருக்கிறது என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர். உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு மகாராஷ்டிராவில் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இந்நிலையில், மராத்தா இடஒதுக்கீட்டை உச்சநீதிமன்றம் ரத்து செய்திருப்பது துரதஷ்டவசமானது என்று மராட்டிய முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார். மராத்தா சமூகம் சுய மரியாதையுடன் வாழ ஒருமனதாக சட்டத்தை நிறைவேற்றி இருந்தோம். இச்சட்டத்தை நிறைவேற்ற பிரதமர், குடியரசு தலைவருக்கே அதிகாரம் இருப்பதாக உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. உச்ச நீதிமன்ற தீர்ப்பை மறு ஆய்வு செய்ய முடியுமே தவிர மாநில அரசால் வேறு எதுவும் செய்ய முடியாது. ஆனால் மத்திய அரசும் ஜனாதிபதியும் மனது வைத்தால் முடியும் என்பதால் அவர்களிடம் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ஒப்புகை சீட்டை முழுமையாக எண்ணக் கோரிய வழக்கு தேர்தல் ஆணையத்துக்கு நீதிபதிகள் கேள்வி: 5 முக்கிய சந்தேகங்களை எழுப்பினர்; விளக்கத்துக்கு பின் தீர்ப்பு ஒத்திவைப்பு
சாதிவாரி கணக்கெடுப்பை எந்த சக்தியாலும் தடுக்க முடியாது: காங். கட்சியின் பொதுச்செயலாளர் ராகுல் காந்தி திட்டவட்டம்!!
கோட்டக் மஹிந்திரா வங்கியில் ஆன்லைன் மூலம் புதிய வாடிக்கையாளர்கள் சேர்த்தல், புதிதாக கிரெடிட் கார்டுகளை வழங்க தடை: ரிசர்வ் வங்கி அறிவிப்பு!!
மக்களவைத் தேர்தல்: உண்மையான பிரச்னைகளில் இருந்து மக்களின் கவனத்தை திசை திருப்புகிறார் மோடி: காங். பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு
கோட்டக் மஹிந்திரா வங்கி ஆன்லைன், செல்போன் செயலி மூலம் புதிய வாடிக்கையாளர்களை சேர்க்க ரிசர்வ் வங்கி தடை
லுக்அவுட், ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்ட நிலையில் காதலியுடன் தாய்லாந்தில் பதுங்கியிருந்த பிரபல தாதா கைது
ஒப்புகைச் சீட்டுகளை பதிவான வாக்குகளுடன் ஒப்பிட்டு பார்க்கக் கோரிய வழக்கில் தீர்ப்பை ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்
மின்னணு வாக்கு இயந்திரத்தில் உள்ள மைக்ரோ கண்ட்ரோலரில் எந்த மாற்றமும் செய்ய முடியாது: உச்சநீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் விளக்கம்
தமிழக விவசாயிகள் டெல்லி ஜந்தர் மந்தரில் செல்போன் டவர், மரத்தின் மீது ஏறி போராட்டம்: ஒன்றிய அரசுக்கு எதிராக கோஷம்
கீழ்த்தரமான அரசியல்வாதி போல பிரதமர் மோடி நடந்து கொள்கிறார்: காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றச்சாட்டு
தேர்தல் பத்திர முறைகேடு விவகாரம் தொடர்பாக சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணை கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு..!!
வயநாடு தொகுதி மக்களை துப்பாக்கிகளுடன் மிரட்டிய மாவேயிஸ்ட்டுகள்: தேர்தலை புறக்கணிக்க வேண்டும் என்று வலியுறுத்தல்