இந்தியா தலா 5 கிலோ இலவச உணவு தானியம் வழங்கும் திட்டத்திற்கு பிரதமர் தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல்..!! May 05, 2021 மத்திய அமைச்சரவை டெல்லி: பிரதமரின் ஏழைகள் நல உணவு திட்டத்தின் கீழ் சுமார் 80 கோடி பேருக்கு தலா 5 கிலோ உணவு தானியம் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், பிரதமரின் ஏழைகள் நல உணவு திட்டத்தின் கீழ் தலா 5 கிலோ உணவு தானியம் வழங்கப்படும் என மத்திய அரசு கடந்த வாரம் அறிவித்திருந்தது. இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் காணொலி காட்சி வாயிலாக நடைபெற்றது. அப்போது கொரோனா பரவல் குறித்தும் அதனை கட்டுப்படுத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. மேலும் 80 கோடி பேர் பயனடையும் வகையில் தலா 5 கிலோ உணவு தானியம் வழங்கும் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதனால் சுமார் 80 கோடி பேர் பயனடைவார்கள் என்றும் இதற்காக 26 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது. சுமார் 80 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானியம் வழங்கப்பட உள்ளதாகவும் மத்திய அரசு கூறியுள்ளது.
உத்தரபிரதேசத்தில் 5 முறை எம்எல்ஏவாக இருந்த சிறையில் அடைக்கப்பட்ட பிரபல தாதா மரணம்: உணவில் விஷம் கலந்து கொன்றதாக மகன் புகார்
ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் ராம்பன் பகுதியில் டாக்சி பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில் 10 பேர் உயிரிழப்பு
தினமும் ரூ.400 தர காங்கிரஸ் வாக்குறுதி யால் பாஜ அச்சம் 100 நாள் வேலை பணியாளர்களுக்கு 4% முதல் 10% வரை ஊதிய உயர்வு: ஒன்றிய அரசு அறிவிப்பு
கெஜ்ரிவால் கைது பற்றி விமர்சித்த நிலையில் காங்கிரசின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து மீண்டும் அமெரிக்கா கருத்து
தலைமை நீதிபதிக்கு வக்கீல்கள் எழுதிய கடிதத்துக்கு ஆதரவு நீதித்துறையை பாதுகாப்பது போல் அதன் மீது தாக்குதல் நடத்தும் மோடி: காங்கிரஸ் கண்டனம்
கடந்த 10 ஆண்டுகள் அழிவு காலம் மோடி அரசை வேரோடு பிடுங்கி எறிய மக்கள் தயாராகி விட்டனர்: காங்கிரஸ் தாக்கு