தமிழகம் திண்டிவனம் அருகே சாலையில் கவிழ்ந்த டேங்கர் லாரி!: குடம், குடமாக பாமாயிலை பிடித்து சென்ற மக்கள்..!! May 05, 2021 திண்டிவனத்தில் விழுப்புரம்: திண்டிவனம் அருகே சாலையில் கவிழ்ந்த பாமாயில் லாரியில் இருந்து கொட்டிய பாமாயிலை அப்பகுதி மக்கள் குடங்களில் பிடித்து சென்றனர். விழுப்புரத்தில் உள்ள தனியார் நிறுவனத்திற்காக சென்னையில் இருந்து 20 டன் பாமாயிலை ஏற்றிக்கொண்டு டேங்கர் லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. லாரி திண்டிவனத்தை அடுத்த ஜக்காம்பேட்டை பகுதியில் சென்று கொண்டிருந்த போது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்புக்கட்டையில் மோதி கவிழ்ந்தது. இதில் லாரியின் டேங்கரில் இருந்த 20,000 லிட்டர் பாமாயில் சாலையில் கொட்டியது. இதனை அறிந்த அப்பகுதி மக்கள் பாமாயிலை குடம் குடமாக பிடித்து சென்றார்கள். தகவல் அறிந்து அங்கு சென்ற மயிலம் போலீசார், தொழிற்சாலைக்கு எடுத்து செல்லப்படும் இந்த பாமாயிலை கொண்டு சமையல் செய்ய முடியாது என்று தெரிவித்தார்கள். ஆனாலும் அதனை பொருட்படுத்தாத மக்கள், தொடர்ந்து பல்வேறு பாத்திரங்களில் எண்ணெய்யை எடுத்து சென்றனர். இதையடுத்து பாலத்தின் கீழே தேங்கி நின்ற பாமாயிலில் தீயணைப்புத் துறையினர், தண்ணீர் கலந்தனர். இந்த விபத்தால் திண்டிவனம் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
வாக்காளர் பட்டியலில் பெயர் இருக்கிறதா, இல்லையா விவகாரம் அரசியல் கட்சிகளுக்கு தான் அதிக பொறுப்பு உள்ளது: முன்னாள் தேர்தல் ஆணையர் கோபால்சாமி கருத்து
விழுப்புரம் அருகே இரண்டு பேரை கொன்ற வழக்கு வழக்கறிஞர், போலீஸ்காரர், அரசு அதிகாரி அதிமுக நிர்வாகி உள்பட 20 பேருக்கு ஆயுள்: விழுப்புரம் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
நாடாளுமன்ற தேர்தலுக்காக மத துவேஷ கருத்துகளை பேசுவது இறையாண்மைக்கு எதிரானது: பிரதமர் மோடிக்கு எடப்பாடி கடும் கண்டனம்
சேமநல நிதியில் இருந்து 16 காவலர் குடும்பத்திற்கு ரூ.31.52 லட்சம் நிதி உதவி: போலீஸ் கமிஷனர் வழங்கினார்
கோயம்பேடு மார்க்கெட்டில் ரசாயனத்தில் பழுக்க வைத்த ரூ.10 லட்சம் மதிப்பு மாம்பழம், வாழைப்பழங்கள் பறிமுதல்: உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடி
பல்கலைக்கழக துணைவேந்தர் நியமன விவகாரம் அதிகார அமைப்புகள் பிரச்னையால் மாணவர்களின் கல்விதான் பாதிப்பு: சென்னை உயர் நீதிமன்றம் கவலை
திருவண்ணாமலையில் சித்ரா பவுர்ணமி விழா கோலாகலம் 25 லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கிரிவலம்: 5 மணி நேரத்துக்கும் மேலாக வரிசையில் காத்திருந்து தரிசனம்