திருச்சி: அரசு மருத்துவமனைகள், தனிமைப்படுத்தும் முகாமில் தங்க வைக்கப்படும் கொரோனா நோயாளிகளுக்கு தேவையான மெத்தைகள் திருச்சி கலெக்டர் அலுவலகத்துக்கு நேற்று வந்தது. கொரோனா நோயாளிகளுக்கு திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. தவிர லேசான அறிகுறி உள்ளவர்களை பாரதிதாசன் பல்கலைக்கழக காஜாமலை வளாகம், சேதுராப்பட்டி அரசு பொறியியல் கல்லூரி ஆகிய தனிமைப்படுத்தும் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு, அவர்களுக்கு உரிய மருந்து மாத்திரைகள், உணவு போன்றவை வழங்கப்பட்டு வருகிறது. தவிர தனியார் மருத்துவமனைகளிலும் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 50 சதவீதம் படுக்கை வசதி ஒதுக்க அரசு உத்தரவிட்டுள்ளது.