சேலம்: தேர்தல் முடிந்த நிலையில் பெட்ரோல், டீசல் விலை நேற்றைய தினம் உயர்த்தப்பட்டது. முறையே 11, 16 காசுகள் அதிகரிக்கப்பட்டதால், சென்னையில் ₹92.54, ₹85.91 என விற்பனை செய்யப்பட்டது. சர்வதேச சந்தையின் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, அமெரிக்க டாலருக்கு நிகராக இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை கணக்கில் கொண்டு பெட்ரோல், டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. தமிழ்நாடு, கேரளா, அசாம், மேற்குவங்கம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் வந்ததால், மார்ச், ஏப்ரல் மாதத்தில் விலையை ஏற்றாமல், நிலையாக வைத்துக் கொண்டனர். இடையில் 6 நாட்கள் மட்டும் மிக சிறிய அளவு விலையை குறைத்தனர். கடைசியாக கடந்த ஏப்ரல் 15ம் தேதி பெட்ரோல் 15 காசும், டீசல் 13 காசும் குறைக்கப்பட்டது. இதன்பின், பழையபடி ஒரே நிலையில் விலையை வைத்துக் கொண்டனர்.