சென்னை: செங்கல்பட்டு அருகே 105 ஏக்கர் அரசு நிலத்தை தனியாருக்கு பட்டா போட்டு கொடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது. தனியாருக்கு பட்ட போட்டு கொடுத்தவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது. தவறுதலாக பட்ட வழங்கப்பட்டதாக அரசு தரப்பில் கூறுவதை ஏற்க முடியாது என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளார்.