தூத்துக்குடி அருகே ப்ளஸ் 2 தேர்வெழுதிவிட்டு வந்த மாணவிக்கு அரிவாள் வெட்டு: ஒருதலை காதலன் கைது

தூத்துக்குடி: செக்காரக்குடி கிராமத்தில் ப்ளஸ் 2 பயிலும் மாணவியை ஒருதலையாக காதலித்த இளைஞர் சோலையப்பன் பள்ளி மாணவியை அரிவாளால் வெட்டியுள்ளார். அரிவாள் வெட்டில் தலையில் பலத்த காயமடைந்த மாணவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் சோலையப்பன் கைது செய்யப்பட்டார்.

தூத்துக்குடி மாவட்டம் அருகே செக்காரக்குடியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் ப்ளஸ் 2 படித்து வரும் மாணவி, இன்று வரலாறு தேர்வு எழுதி முடித்துவிட்டு வெளியே வந்துள்ளார். அதே பகுதியை சேர்ந்த சோலையப்பன் என்பவர் மாணவியை ஒருதலையாக காதாளித்து வந்ததாகவும், மாணவிக்கு அடிக்கடி தொந்தரவு கொடுத்ததாகவும் கூறப்படுகிறது.

சோலையப்பன் காதலுக்கு மாணவி மறுப்பு தெரிவித்துள்ளார். இதையடுத்து தன் காதலுக்கு மறுப்பு தெரிவித்ததால் கையில் மறைத்து வைத்திருந்த ஆயுதத்தால் மாணவியின் தலையில் தாக்கி தப்பி சென்றுள்ளார். இதை கண்ட ஆசிரியர்கள் காயமடைந்த மாணவியை தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

மாணவியை அரிவாளால் தாக்கிவிட்டு தப்பியோடிய சோலையப்பன் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

The post தூத்துக்குடி அருகே ப்ளஸ் 2 தேர்வெழுதிவிட்டு வந்த மாணவிக்கு அரிவாள் வெட்டு: ஒருதலை காதலன் கைது appeared first on Dinakaran.

Related Stories: