சென்னை: கொரோனா தடுப்பூசி தொடர்பான அவதூறு வழக்கில் முன்ஜாமின் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மன்சூர் அலிகான் மனுத்தாக்கல் செய்துள்ளார். கொரோனா தடுப்பூசி பற்றி அவதூறாக பேசியதாக தொடரப்பட்டு உள்ள வழக்கை ரத்து செய்ய கோரியும் மன்சூர் அலிகான் மனுத்தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.