அதிமுக பொதுக்குழு கூட்டத்தை செல்லாது என அறிவிக்க கோரிய சசிகலா வழக்கு ஜூன் 18-க்கு ஒத்திவைப்பு.!!!

சென்னை: அதிமுக பொதுக்குழு கூட்டத்தை செல்லாது என அறிவிக்கக் கோரி சசிகலா தொடர்ந்த வழக்கை ஜூன் 18-ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. ஜெயலலிதா மரணத்துக்கு பின்னர் பொது செயலாளராக சசிகலா, துணைப் பொதுச்செயலாளராக டிடிவி தினகரனை அதிமுகவினர் தேர்வு செய்தனர். ஆனால், 2017ம் ஆண்டு பொதுக்குழுவில் அதிமுக நிர்வாகிகளாக சசிகலா, தினகரன் தேர்ந்தெடுத்தக்கப்பட்டது செல்லாது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சசிகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கை ஜூன் 18-ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

Related Stories: