அரியலூர்: அரியலூரில் பிறந்து சிலமணி நேரமே ஆன பச்சிளம் குழந்தைகளின் உடல்களை அப்பகுதி மக்கள் புதைத்துள்ளனர். அவற்றை காவல் துறையினர் தோண்டி எடுத்து விசாரணை செய்து வருகின்றனர். அரியலூர் மாவட்டம் செந்துறை அருகேயுள்ளது அதனக்குறிச்சி கிராமம். இந்த கிராமத்தில் தனியார் சிமெண்ட் ஆலை சுரங்கத்திற்கு அருகே ஒரு சிறிய ஓடை உள்ளது. இந்த ஓடை கரைகளில் முட்புதரில் நேற்று மாலை பிறந்து சிலமணி நேரங்களே ஆன இரட்டை குழந்தைகளான ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் சிசுகளின் உடல்களில் எறும்பு மொய்ப்பதை கிராமமக்கள் பார்த்துள்ளனர். நமது ஊரில் இவ்வாறு கிடக்கிறது என்று நினைத்து கொண்டு கிராமமக்கள் அந்த பச்சிளம் குழந்தைகளின் உடல்களை புதைத்துள்ளனர்.