புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் செயல்பட்டு வரும் தனியார் நிதி நிறுவனத்தில் சுமார் 1 கோடி ரூபாய் மதிப்பிலான தங்க நகைகளை கையாடல் செய்த ஊழியர்கள் மூவர் கைது செய்யப்பட்டனர். எச்.டி.பி. என்ற தனியார் நிதி நிறுவனம் புதுக்கோட்டையில் கடந்த 5 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. நகைக்கடன், தனிநபர் கடன்களை வழங்கி வரும் இந்த நிறுவனத்தில் ஆண்டு தணிக்கை நடத்தியதில், சுமார் 305 சவரன் தங்க நகைகள் இருப்பில் இல்லாததால் அதிர்ச்சி அடைந்தனர். இது தொடர்பாக விசாரணை மேற்கொண்ட அதிகாரிகள், நகைகளை கையாடல் செய்ததாக நிதி நிறுவன ஊழியர்கள் மூவர் மீது காவல்துறையில் புகார் அளித்தனர். இதையடுத்து, போலீசார் விசாரணை நடத்தியதில், நகைகளை கையாடல் செய்வதற்கு கிளை மேலாளர் உடந்தையாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.