மதுரை: டாஸ்மாக் கடைகளுக்கு வரும் மதுப்பிரியர்களுக்கு சானிட்டைசர் வழங்கவும், காய்ச்சல் அறியவும் ஊழியர்களை நிறுவனம் நியமனம் செய்துள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்றின் 2வது அலை வேகமாக பரவிவருகிறது. இதை முன்னிட்டு ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கும், மற்ற நாட்களில் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை ஊரடங்கும் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது தவிர டாஸ்மாக் கடைகளுக்கு கட்டுப்பாடும் விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் டாஸ்மாக் கடைகளுக்கு வரும் மதுப்பிரியர்களுக்கு சானிட்ைடசர் வழங்கவும், காய்ச்சல் பரிசோதனை செய்யவும் டாஸ்மாக் நிறுவனம் ஊழியர்களை நியமனம் செய்துள்ளது.