வருசநாடு: கண்டமனூர் அருகே 2 மாதமாக கற்கள் கொட்டியதோடு கிடப்பில் கிடக்கும் சாலை பணியால் பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கண்டமனூர் அருகேயுள்ளது பழயை ராமச்சந்திராபுரம். இவ்வூருக்கு செல்லும் ஒன்றரை கிமீ மண்சாலையை தார் சாலையாக்க திட்டமிடப்பட்டது. அதன்படி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு சாலை பணிக்காக ஜல்லி கற்களை கொட்டி சென்றனர். அதன்பின் இதுவரை எந்த பணியும் நடைபெறவில்லை. இப்பகுதி மக்கள் ஒவ்வொரு நாளும் அத்தியாவசிய தேவைகளுக்கு தேனி, ஆண்டிபட்டி, கண்டமனூர் ஆகிய ஊர்களுக்கு வாகனங்களில் மற்றும் நடந்து சென்று வருகின்றனர்.